Monday, September 12, 2011

சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளில் சேர்க்கை தடை: மாணவர்கள் கதி?-11-09-2011


சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளில் சேர்க்கை தடை: மாணவர்கள் கதி?-11-09-2011

எழுத்தின் அளவு :
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு சித்தா, ஆயுர்வேத, ஓமியோபதி கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்க அனுமதி கிடைக்கவில்லை.
இதனால்இப்படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளஆயிரக்கணக்கான மாணவர்கள்திரிசங்கு நிலையில் உள்ளனர்.
இந்தாண்டு அனுமதி கிடைப்பது உறுதியில்லாத நிலையில்சித்தா,ஆயுர்வேதஓமியோபதி படிப்பில் சேர முடியாதுவேறு எந்த படிப்பில்சேர வேண்டுமானாலும் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை முடிந்துவகுப்புகள் நடந்து வருகின்றனஇதனால்அடுத்துஎன்ன செய்வது என்று தெரியாமல் மாணவர்கள் பரிதாப நிலையில்உள்ளனர்தமிழகத்தில் சென்னைபாளையங்கோட்டையில்அரசுசித்தா மருத்துவக் கல்லூரிகளும்நாகர்கோவில் கோட்டாறில் ஒருஆயுர்வேத கல்லூரியும்மதுரை திருமங்கலத்தில் ஓமியோபதி கல்லூரியும்சென்னையில் யுனானிமருத்துவக் கல்லூரியும் செயல்படுகின்றன.
இதுதவிரதனியார் சித்தாஆயுர்வேதஓமியோபதி கல்லூரிகளும் உள்ளனஇவற்றில் படிக்கஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்வழக்கமாகஇந்த மாணவர்களுக்கு,ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும்இந்நிலையில்பாளையங்கோட்டைசித்த மருத்துவக் கல்லூரிநாகர்கோவில் கோட்டாறு ஆயுர்வேத கல்லூரிமதுரை திருமங்கலம்ஓமியோபதி கல்லூரிகளில்மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு அனுமதி கிடைக்கவில்லை.
&'போதுமான ஆசிரியர்கள் இல்லைகல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு நோயாளிகளின்வருகை குறைவு&' என காரணங்கள் கூறிஇந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்குஇந்திய மருத்துவ மத்தியகவுன்சில் அனுமதி மறுத்துவிட்டதுஇதேபோல்மூன்று தனியார் சித்தா மருத்துவக் கல்லூரிகளுக்கும்அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுசென்னை சித்தா மருத்துவக் கல்லூரியில்மாணவர் சேர்க்கைக்கு அனுமதிஉண்டாஇல்லையாஎனஇதுவரை தெரியவில்லை.
கடந்த மூன்றாண்டுகளாகஇதேபோன்று அனுமதி மறுக்கப்படுவதும் பின்மாநில அரசு தலையிட்டுஅனுமதி கிடைப்பதுமான நிலை உள்ளதுஆனால், &'இந்த ஆண்டு குறைந்தபட்ச நிபந்தனைகளை கூடபூர்த்தி செய்யாமல்அனுமதி தர மாட்டோம்&' எனஇந்திய மருத்துவ மத்திய கவுன்சில் உறுதியுடன்தெரிவித்துள்ளதுஆனால்மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டுமத்திய கவுன்சிலுக்குதமிழக அரசுகடிதம் எழுதியுள்ளதுநாடு முழுவதும்இந்திய மருத்துவ முறை மருத்துவக் கல்லூரிகளில்அக்டோபர்31க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கஅனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கவுன்சில்அறிவுறுத்தியுள்ளது
.
தற்போதைய நிலையில்சென்னை சாய்ராம் சித்தா மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே அனுமதிகிடைத்துள்ளதுஇதில், 40 இடங்களில், 26 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமேகவுன்சிலிங் நடத்தமுடியும்அரசு யுனானி கல்லூரியில், 40 இடங்கள் 26 ஆக குறைக்கப்பட்டுள்ளதுஇவற்றிற்கும் மாணவர்சேர்க்கை கவுன்சிலிங் நடத்த முடியும்.
இதற்கிடையே மற்றொரு சிக்கலாகசித்தா மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும்,இந்திய மருத்துவ முறை மத்திய கவுன்சில் அனுமதி மறுத்துள்ளதுஇதனால்இந்திய மருத்துவமுறையைபடிக்க விண்ணப்பித்த மாணவர்கள்சேர்க்கை உண்டாஇல்லையா எனதெரியாமல் பரிதவிப்பில்உள்ளனர்பாரம்பரிய மருத்துவத்தை போற்றும் தமிழகத்தில்பாரம்பரிய மருத்துவ கல்லூரிகளுக்குஇப்படியொரு பரிதாப நிலை ஏற்பட்டிருப்பதுசித்தாஆயுர்வேத மருத்துவர்களை வேதனையடையசெய்துள்ளதுதமிழக அரசுஉடனடியாக தலையிட்டுமாணவர்களின் படிப்பிற்கு உரிய ஏற்பாடுகளைசெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment