Tuesday, September 20, 2011

சித்த மருத்துவ பட்டப் படிப்பு: கலந்தாய்வு எப்போது?

சென்னை, செப்.18: தமிழகத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப்படிப்புகளுக்கு எப்போது கலந்தாய்வு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர், மாணவர்களிடையே எழுந்துள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 1964-ம் ஆண்டு முதல் 47 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 பி.எஸ்.எம்.எஸ். இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய மருத்துவ முறை கவுன்சில் (சி.சி.ஐ.எம்.) அனுமதி மறுத்துள்ளது.
சிசிஐஎம் அதிகாரிகள் குழுவினர் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியை கடந்த மார்ச் மாதம் ஆய்வு செய்ய வந்தபோது, கல்லூரியின் மருத்துவமனையில் 50 சதவீத அளவுக்கு நோயாளிகள் இல்லாததைச் சுட்டிக் காட்டி 100 பி.எஸ்.எம்.எஸ். படிப்பு இடங்களுக்கான ஒப்புதலை நிராகரித்துள்ளது.
இதே போன்று நாகர்கோயில் ஆயுர்வேத அரசு மருத்துவக் கல்லூரியில் 50 பி.ஏ.எம்.எஸ். படிப்பு இடங்களிலும், மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 பி.எச்.எம்.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்கவும் சி.சி.ஐ.எம். ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த இடங்களுக்கு அனுமதி பெற தமிழக அரசின் சுகாதாரத் துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
தனியார் கல்லூரிகளுக்கும்... சித்த-ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், பி.ஏ.எம்.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்கவும், சிசிஐஎம் அனுமதி மறுத்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மொத்த படிப்பு இடங்களிலிருந்து 65 சதவீத இடங்கள் அரசுக்குச் சமர்ப்பிக்கப்படும்.
அனுமதி கிடைக்காமல் இருப்பதால், அரசு ஒதுக்கீட்டுக்கு
இடங்கள் கிடைக்காத நிலை தொடருகிறது.
எவற்றுக்கெல்லாம் அனுமதி? சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் உள்ள 26 பி.யு.எம்.எஸ். இடங்கள், அரசு இயற்கை-யோகா மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 பி.என்.ஒய்.எஸ். இடங்களுக்கு சிசிஐஎம் அனுமதி அளித்துள்ளது. சுயநிதி கல்லூரிகளைப் பொருத்தவரை, மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 40 பி.எஸ்.எம்.எஸ். இடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
காத்திருக்கும் 1,400 மாணவர்கள்: சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், இயற்கை-யோகா மருத்துவ பட்டப்படிப்புகளில் கலந்தாய்வு அடிப்படையில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 1,400 பேர் விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர்.
விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3-வது வாரம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, செப்டம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்த இந்திய மருத்துவ முறை மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு திட்டமிட்டிருந்தது.
மத்திய இந்திய மருத்துவ முறை கவுன்சில் (சிசிஐஎம்) பல கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்க அனுமதி தராததால், தரவரிசைப் பட்டியலை வெளியிடாமலும் கலந்தாய்வு தேதி குறித்துத் தகவல் வெளியிட முடியாமலும் தேர்வுக் குழுவினர் உள்ளனர்.
மருத்துவ நிபுணர்களின் யோசனை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பு உள்பட பிற படிப்புகள் அனைத்தும் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் இனியும் காலதாமதம் செய்யாமல், சிசிஐஎம் இப்போது அனுமதி அளித்துள்ள இந்திய மருத்துவ முறை கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்பு இடங்களில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வை உடனடியாக தேர்வுக் குழு அறிவிக்க வேண்டும் என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 100 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள் உள்ளிட்ட பிற கல்லூரிகளின் இடங்களுக்கு அனுமதி கிடைத்தவுடன் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க அக்டோபர் 31-ம் தேதி கடைசி நாளாகும்.

Saturday, September 17, 2011

தலையங்கம்:இன்றியமையாத் தேவைகள்!

சித்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணம், போதுமான பேராசிரியர்கள் இல்லாததுதான். இந்தக் குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். மீண்டும் மாணவர் எண்ணிக்கை உயரும்'' என்று அரசு அறிவித்துள்ளது.

 இந்த நிலைமை சித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமன்றி, அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இருக்கிறது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி உள்பட, புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், அதன் அங்கீகாரம் நீடிக்கத் தேவையான துறைகள், மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அனுமதி பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் இடமாறுதல் செய்து, வேறு கணக்குகள் காட்டி, மத்திய மருத்துவக் குழுமத்திடம் அங்கீகாரம் பெறுவதற்குள் நம் சுகாதாரத் துறை அதிகாரிகள் படும்பாடு சொல்லி மாளாது.
 சட்டப்பேரவையில் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், ""மாவட்டம்தோறும் அரசு மருத்துவமனை என்பதைப் படிப்படியாக, ஆண்டுக்கு ஒரு மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற வகையில், தேவையான வசதிகள் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி, மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார். அவரே ஒரு மருத்துவர் என்பதால், பிரச்னை என்ன என்பது அவருக்குப் புரிந்திருக்கிறது.
 இதே புரிதலுடன் அவர் கவனம் செலுத்த வேண்டிய மருத்துவத் துறைச் சிக்கல்கள் இன்னும் பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை, புற்றுநோய் சிகிச்சை மையங்கள், நரம்பியல் மருத்துவ மையங்கள் தமிழ்நாட்டின் முக்கியமான நாலைந்து இடங்களில் ஏற்படுத்துவதும் தொற்றிப்பரவும் தன்மையில்லாத நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கான தனி மருத்துவ மையங்களை மாவட்டம்தோறும் அமைப்பதும் இன்றைய மக்களின் இன்றியமையாத தேவையாக இருக்கின்றன.
 காஞ்சிபுரத்தில் கடந்த 41 ஆண்டுகளாகப் ""பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மண்டல மருத்துவமனை'' செயல்பட்டு வருகிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நவீன ஆய்வு வசதிகள், மருத்துவ வசதிகள் காஞ்சிபுரம் மருத்துவமனையில் இல்லை. இருந்தும்கூட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். இவர்களுக்குப் போதுமான படுக்கை வசதிகளும் இல்லை.
 தமிழகத்தின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் சென்னை பெருநகரை நோக்கித்தான் வர வேண்டும் என்கிற எண்ணமே இக்காலத்துக்குப் பொருந்தாது. சென்னை, சேலம், கோவை, மதுரை, தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஏழு மாநகரங்களிலும் புற்றுநோய், நரம்பியல் சிறப்பு மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டியது மிகமிக அவசியம். தேவைப்படும் நேரங்களில் சிறப்பு மருத்துவர்கள் இந்த மருத்துவ மையங்களுக்குச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர, எல்லா நோயாளிகளும் சென்னைக்கு வர வேண்டும் என்பது எந்தவிதத்திலும் நியாயமாகத் தோன்றவில்லை.
 சாலை விபத்துகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2009-ம் ஆண்டில் மரணம் நேரிட்ட விபத்துகள் 12,727. இதில் இறந்தவர்கள் 13,746 பேர். 2010-ம் ஆண்டில் 14,241 விபத்துகளில் 15,409 பேர் இறந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவை இருப்பதால்தான் இந்த மரணங்கள் குறைவாக இருக்கின்றன. இல்லையெனில், மேலும் கூடுதலாகவே இருக்கும். இருப்பினும்கூட, விபத்துகளில் தலைக்காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிக்க நரம்பியல் சிறப்பு சிகிச்சை மையம் சென்னை போன்ற பெருநகரில்தான் இருக்கிறது. நெடுஞ்சாலை விபத்துகளில் பலத்த தலைக்காயம் அடைந்தவர்களை சென்னைக்கு ஆம்புலன்ஸில் கொண்டுவந்துதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
 உதாரணமாக, சுமார் 300 கி.மீ. தொலைவுள்ள சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், நரம்பியல் சிறப்பு மருத்துவம் பெற வேண்டுமானால் பெங்களூர், வேலூர், சென்னை ஆகிய மூன்று இடங்களைத் தவிர, வேறு ஊர்களில் இந்த வசதி இல்லை. நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ. இடைவெளியில் ஓர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தைத் தேர்வு செய்து, நரம்பியல் சிறப்பு மருத்துவ முதலுதவிக் கூடமாக மாற வேண்டும். இவர்களுக்கு நரம்பியல் சிகிச்சை மருத்துவர்கள் தேவையான முதலுதவி அளிப்பதும், விபத்தால் மூளைக்குள் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்கத் துளையிடுதல் போன்ற சிகிச்சைகளைச் செய்து, மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வசதிகள் ஏற்படுத்துவதும் இன்றியமையாத தேவைகள். இதனால் உயிரிழப்புகள் கணிசமாகக் குறையும்.
 108 ஆம்புலன்ஸில் ஒரு விபரீதக் கட்டுப்பாடு இருப்பதாகத் தெரிய வருகிறது. விபத்து நடந்த இடத்திலிருந்து அல்லது பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்திலிருந்து அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசெல்ல மட்டும்தான் 108 ஆம்புலன்ஸýக்கு அனுமதி உள்ளது. ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமானால், அந்த மருத்துவமனையின் ஆம்புலன்ûஸப் பயன்படுத்த வேண்டும் அல்லது தனிவாகனத்தில் நோயாளியைக் கொண்டு சென்றாக வேண்டும்.
 ஒரு பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 50 குழந்தைகளை அரூர் மருத்துவமனைக்குக் கொண்டுபோன 108 ஆம்புலன்ஸ், அவர்களைத் தருமபுரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று கூறிவிட்டது. மருத்துவமனை ஆம்புலன்ஸில் அனைத்துக் குழந்தைகளையும் ஏற்ற முடியவில்லை. சில சிறப்பு நேர்வுகளில், 108 ஆம்புலன்ûஸப் பயன்படுத்தவும், அதற்கான கட்டணத்தை அரசு தனியாக அவர்களுக்கு வழங்கவும் வசதி இருக்குமானால், இதற்கு ஒரு தீர்வு காண முடியும்.
 மருத்துவர் ஒருவரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக்கி இருப்பதிலிருந்தே தமிழக முதல்வர், இந்தத் துறை சார்ந்த பிரச்னைகளை அதிகாரிகளின் பார்வையில் அணுகாமல் அனுபவரீதியாக அணுக வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது தெரிகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை சார்ந்த மானியக் கோரிக்கையின்போது பேசிய அமைச்சரின் பார்வையும் நோக்கமும் சரியாகவே இருக்கிறது. மேலே நாம் குறிப்பிட்டிருக்கும் பிரச்னைகளையும் கவனத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

சித்த மருத்துவப் படிப்பு: சென்னை அரசு கல்லூரிக்கு மத்திய கவுன்சில் அனுமதி

சித்த மருத்துவப் படிப்பு: சென்னை அரசு கல்லூரிக்கு மத்திய கவுன்சில் அனுமதி
First Published : 17 Sep 2011 12:53:52 AM IST


சென்னை, செப்.16: சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 50 சித்த மருத்துவப் பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்களில் நடப்பாண்டில் மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய மருத்துவ முறை கவுன்சில் (சிசிஐஎம்) அனுமதி அளித்துள்ளது.
இதே போன்று அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் முதுநிலை சித்த மருத்துவப் பிரிவு இடங்களின் எண்ணிக்கையை 20-லிருந்து 34-ஆக அதிகரித்து சிசிஐஎம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காத்திருக்கும் பாளையங்கோட்டை: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 1964-ல் தொடங்கப்பட்ட அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 100 சித்த மருத்துவப் பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்கள், 60 முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க சிசிஐஎம் அனுமதி அளிக்கவில்லை. அனுமதியைப் பெறுவதற்கான முயற்சிகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் எடுத்து வருகிறார்.
ஹோமியோபதிக்கும் அனுமதி இல்லை: இதேபோன்று மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 பி.எச்.எம்.எஸ். இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க சிசிஐஎம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
தனியார் கல்லூரிக்கு அனுமதி... கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறையில் உள்ள ஏடிஎஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டில் 40 பி.எஸ்.எம்.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்குமாறு இந்திய மருத்துவ முறை துறைக்கு (ஆயுஷ்) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் 40 பி.எஸ்.எம்.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க சிசிஐஎம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது.
அரசு முதுநிலை படிப்பு இடங்கள்: சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்கள் 34-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது சித்த மருத்து நிபுணர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் முதுநிலை படிப்பு (எம்.டி.) இடங்களை நடப்புக் கல்வி ஆண்டில் 46-லிருந்து 25-ஆக சிசிஐஎம் குறைத்து விட்டது.
இந்த நிலையில் சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (குணபாடம்)-10 இடங்கள், எம்.டி. (பொது மருத்துவம்)-10 இடங்கள், எம்.டி. (சிறப்பு மருத்துவம்)-5 இடங்கள், எம்.டி. (குழந்தை மருத்துவம்)-5 இடங்கள், எம்.டி. (நோய் நாடல்)-4 இடங்கள் என 34 முதுநிலை படிப்பு இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க சிசிஐஎம் அனுமதி அளித்துள்ளது.

Tuesday, September 13, 2011

WORLD BREAST FEEDING WEEK : AUGUST 1-7 WOR


Why 3D?

    When we look at breastfeeding support, we tend to see it in two-dimensions: time (from pre-pregnancy to weaning) and place (the home, community, health care system, etc). But neither has much impact without a THIRD dimension - communication!

    Communication is an essential part of protecting, promoting and supporting breastfeeding. We live in a world where individuals and global communities connect across small and great distances at an instant's notice. New lines of communication are being created every day, and we have the ability to use these information channels to broaden our horizons and spread breastfeeding information beyond our immediate time and place to activate important dialogue.

      This third dimension includes cross-generation, cross-sector, cross-gender, and cross-culture communication and encourages the sharing of knowledge and experience, thus enabling wider outreach.
 "Initiated within the first one hour of child birth, mother's milk, especially the colostrum, can act as an immune booster." Apart from strengthening the emotional bonding between the mother and the child, breastfeeding also contributes to improve child health.

      Doctors are of the view that over 30% of the newborn (infants less than 28 days) deaths can be prevented if breastfeeding is initiated within first one hour of birth and 13% of infant deaths can be averted if infants are put on exclusive breastfeeding for six months. "If we ensure initial breastfeeding and exclusive breastfeeding of all children who are born in the state every year, we will be able to achieve the goal of reducing IMR by 2015," doctors added. The breastfeeding programme is part of the fight against malnutrition an infant mortality.


SURA PUTTU


Ingredients
Paal Suraa - one kg
Small onion –500 gms
Garlic –15, Ginger –50 gms
Green chille-4, Salt-25 gms
Seism oil-100ml , Kaduku-qs
Clean and boil the piece of suraa and squeeze it well until the water drains. Place the kadai in stove and  heat it, then add gingili oil  and kaduku. Add  crunched ginger, onion and chili fry it well, then add boiled suraa and fry it until it turns into a golden brown colour
Medicinal uses: It increases the secretion of  milk in lactating mothers. And also given as a valuable food for the patients.


Galactagogue


Facts about Shatavari (Thaneervittan kizhangu )

 

              Shatavari plants climbs through the trees and generally grows throughout India in low forest regions. Mainly roots of the plant are used for preparation of various medicines. Shatavari also has essential components of vitamin B, bioflavonoid, essential calcium, zinc elements, triterpene saponins called Shatavarin I-IV, alkaloids, proteins, saponins and tannins.
              Shatavari helps in promoting health, particularly its use as galactagogue (enhancing breast milk secretion for lactating mothers) has been highlighted. Clinical study carried out by Dept. of Gynecology & Obstetrics, Ayurveda Hospital, Nepal on The Effect of Shatavari in Threatened Abortion and High Risk Pregnancy, proved that 90% mothers had a successful, healthy pregnancy and delivery if consuming shatavari. 
By nourishing female reproductiveorgans, it prepares them for conceiving. Helps in preventing miscarriages and is very useful as post partum tonic. Supports normal hormone utilization and normal blood hormone levels.
Relief of PMS symptoms such as pain and control of blood loss at time of mestruation.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்

            சித்த மருத்துவப் படிப்பு: பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 பி.எஸ்.எம்.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சிலின் (சிசிஐஎம்) அனுமதி பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' என்றார்


              சித்த மருத்துவ மாணவர்களுக்கு விடுதி: சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும், மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் நடப்பாண்டில் தலா ரூ.1.7 கோடியில் விடுதி கட்டடம் கட்டித் தரப்படும் என்றார்.

Monday, September 12, 2011

சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளில் சேர்க்கை தடை: மாணவர்கள் கதி?-11-09-2011


சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளில் சேர்க்கை தடை: மாணவர்கள் கதி?-11-09-2011

எழுத்தின் அளவு :
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு சித்தா, ஆயுர்வேத, ஓமியோபதி கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்க அனுமதி கிடைக்கவில்லை.
இதனால்இப்படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளஆயிரக்கணக்கான மாணவர்கள்திரிசங்கு நிலையில் உள்ளனர்.
இந்தாண்டு அனுமதி கிடைப்பது உறுதியில்லாத நிலையில்சித்தா,ஆயுர்வேதஓமியோபதி படிப்பில் சேர முடியாதுவேறு எந்த படிப்பில்சேர வேண்டுமானாலும் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை முடிந்துவகுப்புகள் நடந்து வருகின்றனஇதனால்அடுத்துஎன்ன செய்வது என்று தெரியாமல் மாணவர்கள் பரிதாப நிலையில்உள்ளனர்தமிழகத்தில் சென்னைபாளையங்கோட்டையில்அரசுசித்தா மருத்துவக் கல்லூரிகளும்நாகர்கோவில் கோட்டாறில் ஒருஆயுர்வேத கல்லூரியும்மதுரை திருமங்கலத்தில் ஓமியோபதி கல்லூரியும்சென்னையில் யுனானிமருத்துவக் கல்லூரியும் செயல்படுகின்றன.
இதுதவிரதனியார் சித்தாஆயுர்வேதஓமியோபதி கல்லூரிகளும் உள்ளனஇவற்றில் படிக்கஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்வழக்கமாகஇந்த மாணவர்களுக்கு,ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும்இந்நிலையில்பாளையங்கோட்டைசித்த மருத்துவக் கல்லூரிநாகர்கோவில் கோட்டாறு ஆயுர்வேத கல்லூரிமதுரை திருமங்கலம்ஓமியோபதி கல்லூரிகளில்மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு அனுமதி கிடைக்கவில்லை.
&'போதுமான ஆசிரியர்கள் இல்லைகல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு நோயாளிகளின்வருகை குறைவு&' என காரணங்கள் கூறிஇந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்குஇந்திய மருத்துவ மத்தியகவுன்சில் அனுமதி மறுத்துவிட்டதுஇதேபோல்மூன்று தனியார் சித்தா மருத்துவக் கல்லூரிகளுக்கும்அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுசென்னை சித்தா மருத்துவக் கல்லூரியில்மாணவர் சேர்க்கைக்கு அனுமதிஉண்டாஇல்லையாஎனஇதுவரை தெரியவில்லை.
கடந்த மூன்றாண்டுகளாகஇதேபோன்று அனுமதி மறுக்கப்படுவதும் பின்மாநில அரசு தலையிட்டுஅனுமதி கிடைப்பதுமான நிலை உள்ளதுஆனால், &'இந்த ஆண்டு குறைந்தபட்ச நிபந்தனைகளை கூடபூர்த்தி செய்யாமல்அனுமதி தர மாட்டோம்&' எனஇந்திய மருத்துவ மத்திய கவுன்சில் உறுதியுடன்தெரிவித்துள்ளதுஆனால்மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டுமத்திய கவுன்சிலுக்குதமிழக அரசுகடிதம் எழுதியுள்ளதுநாடு முழுவதும்இந்திய மருத்துவ முறை மருத்துவக் கல்லூரிகளில்அக்டோபர்31க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கஅனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கவுன்சில்அறிவுறுத்தியுள்ளது
.
தற்போதைய நிலையில்சென்னை சாய்ராம் சித்தா மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே அனுமதிகிடைத்துள்ளதுஇதில், 40 இடங்களில், 26 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமேகவுன்சிலிங் நடத்தமுடியும்அரசு யுனானி கல்லூரியில், 40 இடங்கள் 26 ஆக குறைக்கப்பட்டுள்ளதுஇவற்றிற்கும் மாணவர்சேர்க்கை கவுன்சிலிங் நடத்த முடியும்.
இதற்கிடையே மற்றொரு சிக்கலாகசித்தா மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும்,இந்திய மருத்துவ முறை மத்திய கவுன்சில் அனுமதி மறுத்துள்ளதுஇதனால்இந்திய மருத்துவமுறையைபடிக்க விண்ணப்பித்த மாணவர்கள்சேர்க்கை உண்டாஇல்லையா எனதெரியாமல் பரிதவிப்பில்உள்ளனர்பாரம்பரிய மருத்துவத்தை போற்றும் தமிழகத்தில்பாரம்பரிய மருத்துவ கல்லூரிகளுக்குஇப்படியொரு பரிதாப நிலை ஏற்பட்டிருப்பதுசித்தாஆயுர்வேத மருத்துவர்களை வேதனையடையசெய்துள்ளதுதமிழக அரசுஉடனடியாக தலையிட்டுமாணவர்களின் படிப்பிற்கு உரிய ஏற்பாடுகளைசெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Saturday, September 10, 2011

Indigenous medicine losing favour TNN | Sep 9, 2011, 01.32AM IST

CHENNAI: Indigenous medicine is losing patronage in the country. The union health ministry has de-recognised nearly half of the colleges offering courses in Indian medicine due to the dwindling number of patients and poor infrastructure. Notifications denying permission have been issued to over 140 of the 320 colleges in the country. About 114 institutions have been granted permission while the results of the others are not known.

The Central Council for Indian Medicine (CCIM), the regulatory body for education in Indian medicine, inspected campuses and sent reports to the department of AYUSH (Ayurveda, Yoga, Unani, Siddha and Homeopathy). Based on these reports, the decision to cancel permission for some colleges, including those run by the centre and states, was taken. Karnataka topped the list with 33 colleges losing recognition, followed by Maharashtra with 25 and Uttar Pradesh with 16. Among the various streams of Indian medicine, Siddha colleges seemed to be the worst affected. Of the eight undergraduate medical colleges offering the course in the country, only one private institution was accorded permission. At the National Institute of Siddha, a central institution that runs postgraduate courses, the number of seats have been cut to half.

CCIM vice-president (Siddha) Dr V Stanley Jones said one of the main reasons for denial of permission was the lack of patronage from patients. The rule book makes it mandatory for at least 40% of the beds to be filled. In the government college for Siddha in Palayamkottai near Tirunelveli, the oldest such institution in the state, the bed strength was only 38% in 2010. "If there are no patients, there is nothing the college can teach students. We are now asking governments and colleges to take initiatives to bring in more public support," he said.

The number of seats for Ayurveda and Unani courses is also expected to come down drastically. Apart from the lack of adequate patients, there was also dearth of faculty and lack of infrastructure. Some state governments have approached AYUSH requesting it to reconsider their decisions. The Tamil Nadu government, commissioner of Indian medicine A Mohammed Aslam said, had managed to increase in-patient strength and recruitment of faculty was on. "We hope the decision is reconsidered," he said.

An AYUSH official from New Delhi, who did not want to be named, said colleges had been given enough time to rectify errors but nothing had changed. "If we don't take action now, we fear the quality of medical education will drop," he said.

Central Council for Indian Medicine vice-president said one of the main reason for denial of permission was the lack of patronage from patients. The rule book makes it mandatory for at least 40% of the beds to be filled.

Tuesday, September 6, 2011

சித்த மருத்துவப் பாடங்களில் மாற்றம் இல்லை: அமைச்சர் டாக்டர் விஜய் அறிவிப்பு


சித்த மருத்துவப் பாடங்களில் மாற்றம் இல்லை: அமைச்சர் டாக்டர் விஜய் அறிவிப்பு

First Published : 30 Aug 2011 01:29:39 AM IST

சென்னை, ஆக.29: சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பாடத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அறிவித்தார்.
 அதேபோன்று பி.எஸ்.எம்.எஸ். (சித்த மருத்துவப் பட்டப்படிப்பு), பி.ஏ.எம்.எஸ். (ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பு), பி.யு.என்.எஸ். (யுனானி மருத்துவப் பட்டப்படிப்பு), பி.எச்.எம்.எஸ். (ஹோமியோபதி மருத்துவப் பட்டப்படிப்பு) ஆகியவற்றின் பெயரிலும் மாற்றம் இருக்காது என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 மாணவர்கள் போராட்டம் ஏன்? சித்த மருத்துவப் படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேத மருத்துவப் படிப்பு (பி.ஏ.எம்.எஸ்.), யுனானி மருத்துவப் படிப்பு (பி.யு.எம்.எஸ்.), ஹோமியோபதி மருத்துவப் படிப்பு (பி.எச்.எம்.எஸ்.) ஆகியவற்றின் பெயரில் அறுவைச் சிகிச்சைக்கு உள்ள "எஸ்' என்ற எழுத்தையும், அலோபதி பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டு மாற்றப்பட்ட பாடத் திட்டத்தையும் நடப்புக் கல்வி ஆண்டிலேயே (2011-12) அமல்படுத்தும் வகையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியது.
 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை, அரசு யுனானி கல்லூரி மாணவர் பேரவை, அரசு இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை, நாகர்கோவில் ஆயுர்வேத அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கடந்த வாரம் ஆங்காங்கே கல்லூரி வளாகத்துக்குள் நாள் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 தலைமைச் செயலகத்தில்...இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் தலைமையில் மேலே குறிப்பிட்ட இந்திய மருத்துவ முறைகளின் மாணவர் பேரவையைச் சேர்ந்த 14 மாணவர்கள் கலந்து கொண்ட கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
 சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், இந்திய மருத்துவத் துறை ஆணையர் முகம்மது அஸ்லாம், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சி.வம்சதாரா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன், பதிவாளர் டாக்டர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 இந்தக் கூட்டத்தில் சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பாடத் திட்டங்கள் மாற்றம் எதுவும் இன்றி பழைய முறையிலேயே தொடரும் என்றும் பட்டப்படிப்புகளின் பெயர்களிலும் மாற்றம் எதுவும் செய்யப்பட மாட்டாது என்றும் மாணவர்களிடம் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் உறுதி அளித்தார்.
 விரைவில் தனி பல்கலைக்கழகம்: அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் அமைச்சரிடம் மாணவர்கள் தெரிவித்தனர்.
 தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு எதிரான தங்களது ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தனர். சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கு என பிரத்யேகமாக பல்கலைக்கழகம் அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தங்களிடம் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் கூறியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

சரிவைச் சந்திக்கிறதா தேசிய சித்த மருத்துவ நிறுவனம்?


சரிவைச் சந்திக்கிறதா தேசிய சித்த மருத்துவ நிறுவனம்?

First Published : 05 Sep 2011 01:31:55 AM IST


சென்னை, செப்.4: மத்திய அரசின் நிதி ஆதரவு இருந்தும்கூட தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறித்து சித்த மருத்துவக் கல்வியாளர்கள் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
தாம்பரம் சானடோரியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, 2007-ம் ஆண்டு தேசிய சித்த மருத்துவக் கட்டட விரிவாக்கப் பணிக்கு ரூ.18 கோடியை ஒதுக்க ஆவன செய்தார். நான்கு ஆண்டுகள் கடந்தும்கூட கட்டடப் பணி இன்னும் தொடங்கவில்லை. மத்திய பொதுப்பணித் துறையிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேசிய சித்த மருத்துவமனையின் படுக்கை வசதி எண்ணிக்கை அதிகரிப்பை உள்ளடக்கியது இந்தக் கட்டட திட்டப் பணி. இப்போது தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவமனையில் மொத்தம் 120 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இந்த படுக்கை வசதியை அதிகரித்தால் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கையை பழையபடி அதிகரிக்க மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளிக்கும்.
இதே போன்று சித்த மருத்துவ ஆசிரியர் எண்ணிக்கையை காரணம் காட்டியும், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் 48-லிருந்து 25-ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தப் பணியில் இருந்த நான்கு மருத்துவ ஆசிரியர்களுக்கு, அவர்களது பணிக் காலத்தை நீட்டிப்பு செய்யாமல் அண்மையில் பணியிலிருந்து தேசிய சித்த மருத்துவமனை நிர்வாகம் அனுப்பிவிட்டது.
தினமும் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகள் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர். எனினும் சித்த மருந்துகள் அனைத்தும் போதிய அளவுக்கு இல்லை என்ற புகாரும் உள்ளது.

சித்த மருத்துவக் கல்வியை தமிழக அரசு காப்பாற்றுமா?


சித்த மருத்துவக் கல்வியை தமிழக அரசு காப்பாற்றுமா?

First Published : 05 Sep 2011 01:30:23 AM IST


சென்னை, செப்.4: தமிழகத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக இருந்து வரும் முதுநிலை படிப்பு இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் (சிசிஐஎம்) அனுமதி மறுத்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மிகப் பழமையான பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை அரும்பாக்கம்சித்த மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) முதுநிலை சித்த மருத்துவப் பிரிவுகளுக்கு உரிய 140 இடங்களில் மாணவர்களைச் சேர்க்க
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
47 ஆண்டுக்கால கல்லூரி: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 1964-ல் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த பல
ஆண்டுகளாக சித்த மருத்துவப் பிரிவில் எம்.டி. (பொது மருத்துவம்), எம்.டி. (குணபாடம்), எம்.டி. (சிறப்பு மருத்துவம்), எம்.டி. (குழந்தை மருத்துவம்), எம்.டி. (நஞ்சு மருத்துவம்), எம்.டி. (நோய் நாடல்) என ஆறு முதுநிலை பாடப் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 மாணவர்கள் வீதம் மொத்தம் 120 பேர் தொடர்ந்து படித்து வருகின்றனர்.
இதே போன்று சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.டி. (பொது மருத்துவம்), எம்.டி. (குணபாடம்) ஆகிய இரண்டு பிரிவுகளில் தலா 10 மாணவர் வீதம் மொத்தம் 20 பேர் படித்து வருகின்றனர். நடப்புக் கல்வி ஆண்டில் இந்த முதுநிலை படிப்பு இடங்களில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மருத்துவத்துக்கு மேலும் சறுக்கல்: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திலும் ("அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை'), பாளையங்கோட்டையைப் போன்று ஆறு முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. ஒவ்வொரு முதுநிலை பிரிவிலும் தலா 8 இடங்கள் வீதம் மொத்தம் 48 இடங்கள் இருந்தன.
ஆனால், இந்த முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கையையும் நடப்புக் கல்வி ஆண்டில் 48-லிருந்து 25-ஆக மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் குறைத்துள்ளது.
இதுவரை இருந்த 6 முதுநிலை பாடப் பிரிவுகளில், 4 முதுநிலை பாடப் பிரிவுகளில் மட்டுமே மாணவர்களைச் சேர்க்க அது அனுமதி வழங்கியுள்ளது.
முதுநிலை சித்த மருத்துவப் பிரிவான குழந்தை மருத்துவம் (எம்.டி.-குழந்தை மருத்துவம்) படிப்புக்கு உரிய 8 இடங்களுக்கும், முதுநிலை நோய் நாடல் மருத்துவம் (எம்.டி.-நோய் நாடல்) படிப்புக்கு உரிய 8 இடங்களுக்கும் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என மத்திய சித்த மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளது.
எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பு இடங்களை 8-லிருந்து 6-ஆகவும், எம்.டி. (குணபாடம்) படிப்பு இடங்களை 8-லிருந்து 5-ஆகவும், எம்.டி. (சிறப்பு மருத்துவம்) படிப்பு இடங்களை 8-லிருந்து 7-ஆகவும், எம்.டி. (நஞ்சு மருத்துவம்) படிப்பு இடங்களை 8-லிருந்து 7-ஆகவும் மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் குறைத்துள்ளது.
காரணம் என்ன? பேராசிரியர்-விரிவுரையாளர் போதிய எண்ணிக்கையில் இல்லாமை, மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமை, ஆய்வுக்கூட வசதியின்மை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதியின்மையைக் காரணம் காட்டி முதுநிலை படிப்பு இடங்களுக்கான அனுமதியை அது ரத்து செய்துள்ளது அல்லது குறைத்துள்ளது. முதுநிலை (எம்.டி.) சித்த மருத்துவ இடங்கள் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆண்டுதோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) முடிக்கும் நூற்றுக்கணக்கான சித்த மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
உடனடி தீர்வு என்ன? எம்.பி.பி.எஸ்.-எம்.டி. படிப்புக்கு உரிய தரத்துக்கு இணையாக ஆசிரியர்-மாணவர் விகிதம் உள்ளிட்டவற்றில் மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் கடுமையான விதிகளை ஏற்படுத்தி படிப்பு இடங்களுக்கான ஒப்புதலை வழங்கி வருவதாக சித்த மருத்துவக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
எனவே சித்த மருத்துவப் பிரிவு முதுநிலை இடங்களுக்கான அனுமதியை மத்திய இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனடியாக எடுக்க வேண்டும்.
அதாவது, மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்பார்க்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் ஏற்படுத்துவதாக உறுதி அளித்து, முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு இடங்கள் பறி போகாமல் தடுக்க வேண்டும்.
நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்' என்று சித்த மருத்துவக் கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

"அவசர சிகிச்சைப் பிரிவில்' சித்த மருத்துவக் கல்வி!


"அவசர சிகிச்சைப் பிரிவில்' சித்த மருத்துவக் கல்வி!

First Published : 06 Sep 2011 01:38:26 AM IST


சென்னை, செப். 5: தமிழகத்தில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 100 பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்கள் மற்றும் 3 தனியார் சித்த மருத்துக் கல்லூரியின் 120 இடங்களில் மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (சிசிஐஎம்) அனுமதி மறுத்துள்ளது.
1964-ல் தொடங்கப்பட்ட மிகப் பழமையான பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 100 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், முதுநிலை மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சித்த மருத்துவக் கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வேலுமயில் சித்த மருத்துவக் கல்லூரியின் 40 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், கோவை ஆர்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியின் 30 இடங்கள், கன்னியாகுமரி படுக்கடையில் உள்ள ஏடிஎஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரியின்
50 இடங்கள் என 120 இடங்களிலும் மாணவர்களைச் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று நாகர்கோயிலில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் 50 பட்டப்படிப்பு (பி.ஏ.எம்.எஸ்.) இடங்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தர்மா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் 40 இடங்கள் என மொத்தம் 90 பி.ஏ.எம்.எஸ். இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (சிசிஐஎம்) அனுமதி அளிக்கவில்லை.
பரிசீலனையில்... சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்களுக்கும், 20 முதுநிலை மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்களுக்கும், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் 50 பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்களுக்கும் மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சிலின் அனுமதி இதுவரை கிடைக்காத நிலை தொடருகிறது.
அதாவது, இந்த இடங்களைப் பொருத்தவரை அனுமதி நிராகரிக்கப்பட்டதாகவோ அல்லது அனுமதி அளிக்கப்படும் என்ற தகவலோ இல்லை.
மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் 50 பட்டப்படிப்பு (பி.எச்.எம்.எஸ்.) இடங்களுக்கும் இதே நிலை தொடருகிறது.
ஒரே ஆறுதல்: மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 40 பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்களுக்கு மட்டுமே நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
கலந்தாய்வு நடத்த முடியாமல்...: சித்த மருத்துவ பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேத மருத்துவ பட்டப்படிப்பு (பி.ஏ.எம்.எஸ்.), ஹோமியோபதி மருத்துவ பட்டப்படிப்பு (பி.எச்.எம்.எஸ்.), இயற்கை-யோகா மருத்துவப் படிப்பு (பி.என்.ஒய்.எஸ்.) ஆகியவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டிலும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சேர இரண்டு மாதங்களுக்கு முன் விண்ணப்பம் வழங்கப்பட்டது.
இந்தப் படிப்புகளில் சேர உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 1,400 மாணவர்கள் காத்திருக்கின்றனர். ஆகஸ்ட் 3-வது வாரம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, செப்டம்பர் முதல் வாரம் கலந்தாய்வை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
எனினும் மேலே குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் சித்த-ஆயுர்வேத-ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பாக சிக்கல் தொடர்வதால், தரவரிசைப் பட்டியலை வெளியிடவோ, கலந்தாய்வை நடத்தவோ முடியாத நிலைக்கு சித்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தள்ளப்பட்டுள்ளது.
முதுநிலை இடங்களுக்கும்... பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்களுக்கு மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்களுக்கும் மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
மேலும் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் (என்ஐஎஸ்) உள்ள முதுநிலை சித்த மருத்துவ இடங்களையும் (எம்.டி.) 25-ஆக மத்திய இந்திய மருத்துவ முறை குறைத்துள்ளது.
காரணம் என்ன? மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாமை அல்லது சித்த மருத்துவக் கல்வியின் தரத்தைக் காக்கும் வகையில் மருத்துவமனை வசதிகள் இல்லாமை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைக் காரணம் காட்டி மாணவர் சேர்க்கை அனுமதியை மத்திய இந்திய மருத்துவ முறை கவுன்சில் (சிசிஐஎம்) மறுத்துள்ளது.
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றால், சென்னையில் உள்ள இந்திய மருத்துவத் துறை இயக்குநரகம் செயல்படுகிறதா என சித்த மருத்துவக் கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.