Monday, May 1, 2023

உலக மலேரியா நாள் - 25 ஏப்ரல் (World Malaria Day – 25th April , WMD)

 

உலக மலேரியா நாள் -  25 ஏப்ரல்

(World Malaria Day – 25th April , WMD)

 

ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

 மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.

 ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர்.  உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்.

 வழக்கமாக நோய்க்காவியான பெண் அனாஃபிலிஸ் (Female Anopheles) கொசு அல்லது நுளம்பு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து அனாஃபிலிஸ் (Anopheles) கொசுக்களினால் மட்டுமே மலேரியா நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது.

 மலேரியாவின் அறிகுறிகளாவன:

காய்ச்சல், உடல் நடுக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல், வாந்தி, இரத்த சோகை , விழித்திரை சேதமடைதல்,  மற்றும் வலிப்புகள். சுழற்சி முறையில் ஏற்படும் திடீர் குளிர்மத்தைத் தொடர்ந்து குளிர்நடுக்கம் ஏற்படும். அதன் பிறகு காய்ச்சலும் வியர்வையும் 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும்.

 

“வருமுன் காப்போம்”

“வருமுன் காப்போம்” என்ற சித்த மருத்துவத்தின் கோட்பாட்டின்படி மலேரியா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க நமது சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதார கேடு இன்றியும் வைத்திருத்தல் அவசியம்.

 நோயைப் பரப்பும் இந்த கொசுக்களை அழிப்பதும், வளர விடாமல் தடுப்பதும், கொசு கடிப்பதிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதும் முக்கிய பங்காற்றும்...

 சித்த மருத்துவம் கூறிய வழியில், நோய் எதிர்ப்பாற்றலை கூட்டும் விதமாக, காயகற்ப முறைகளையும், நாளொழுக்கம், கால ஒழுக்கங்களையும் பின்பற்றி வாழுதல் அவசியம்.

 சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், வாத சுர குடிநீர், திரிகடுகு சூரணம் ,பிரம்மானந்த பைரவம் போன்ற மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ள நற்பலனை தரும்.

 தமிழர்களின் நாகரிகத்தில் கடைப்பிடித்து வந்த, சுகாதார முறைகளான கிருமி நாசினி செய்கை கொண்ட பசுஞ்சாணம் மற்றும் மஞ்சளை கலந்த நீரை தெளித்து, வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல்..

 சிறுகுறிஞ்சான், நிலவேம்பு, ஆடாதொடை, கற்பூரவள்ளி மற்றும் கற்றாழை போன்ற செடிகளை வீட்டின் தோட்டத்தில் வளர்த்தல்..

தினந்தோறும் மாலை நேரங்களில் ஆமணக்கு நெய் அல்லது எள் எண்ணெய் கொண்டு விளக்கேற்றுதல்...

வாரம் தோறும் வீட்டில் சாம்பிராணி அல்லது காய்ந்த நொச்சி வேப்பம் இலைகளைக் கொண்டு புகையிடுதல் போன்றவை கொசுக்களை வளர விடாமல் தடுக்கும்.

 

சித்த மருத்துவ சேவையில்….

அவிழ்த்தம் சித்த மருத்துவமனை,
அம்பத்தூர், சென்னை-53
9444403023

Wednesday, July 18, 2018

குடல்புண் ஆற்றும், மலச்சிக்கல் போக்கும், ஆண்மை பெருக்கும் துத்தி!

குடல்புண் ஆற்றும், 

மலச்சிக்கல் போக்கும், 

ஆண்மை பெருக்கும் துத்தி!

'துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு
மெத்த விந்துவும் பெருகும் மெய்குளிரும் - சத்தியமே 
வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந் 
தேயாமதி முகத்தாய் செப்பு'
துத்திப் பூவால் ரத்த வாந்தி நிற்கும். காச ரோகம் நீங்கும். சுக்கில (விந்து) விருத்தி உண்டாகும், தேகம் குளிர்ச்சி அடையும்  என்று `அகத்தியர் குணபாடம்’ துத்தியின் மேன்மையைப் பறைசாற்றுகிறது.
துத்தி
நம்முடைய முன்னோர்கள் மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு கீரைகளை உணவுப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். அதைப் போன்ற சிறப்புவாய்ந்த கீரை வகைகளை நாம் அதிகம் கண்டுகொள்வதே இல்லை. எந்தப் பராமரிப்பும் இல்லாமல் வளர்ந்து, எண்ணற்ற Dr.செந்தில் கருணாகரன் சித்த மருத்துவர்நோய்களைப் போக்கும் கீரை வகைகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒரு கீரை வகை `துத்தி.’ அதன் சிறப்புகளைப் பற்றி விவரிக்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்... 
'துத்திக் கீரை' பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு குறுஞ்செடி. இதற்கு 'அதிபலா' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதை ஆங்கிலத்தில் 'Indian mallow ' என்று அழைப்பர். இதன் இலைகள் மிகவும் பசுமையாக இதய வடிவில் இருக்கும். இதில் மஞ்சள் நிறத்தில் அழகான பூக்கள் பூக்கும். இதனுடைய விதை, வேர், இலை, பூ, காய் என அனைத்தும் மருத்துவத் தன்மைகொண்டது. இதன்  காய்கள் தோடு போன்று காணப்படும். இது இனிப்புச் சுவை உடையது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது கடற்கரை ஓரங்கள் மற்றும் சாலை ஓரங்களில் வளரக்கூடியது. இது இரண்டு முதல் மூன்று அடி உயரம் வளரக்கூடியது. 29 வகையான துத்திகள் உள்ளன. ஆனால், அதிகமாகப் பயன்படுத்தப்படுவது  `பணியாரத் துத்தி.’
துத்திக்கீரை  கூட்டு:
துத்திக்கீரை -  200 கி
சின்ன வெங்காயம் -  100 கி
வேகவைத்த துவரம் பருப்பு - 3 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
துத்திக்கீரை மற்றும் சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சீரகத்தைப் போடவும். நறுக்கிவைத்திருக்கும் கீரை மற்றும் வெங்காயத்தை வாணலியில் போட்டு வதக்கவும். பிறகு, தேவையான அளவு நீர் ஊற்றி வேகவைக்கவும். நன்றாக வெந்த பின்னர் துவரை, மிளகுத்தூள் போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால், ஆரோக்கியமான  கூட்டு தயார். இதனைச் சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டுவர மூலம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலும் நீங்கும்.
துத்தியால் கிடைக்கும் மருத்துவப் பயன்கள்:
துத்திமூலநோய்க்கு ஆகச்சிறந்த நிவாரணியாக துத்தி இருக்கிறது. துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் நன்றாக வதக்கி, மூலத்தில் கட்டினால் வீக்கம் குறையும். 
கையளவு துத்திக் கீரையை எடுத்து நீரில் கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு பாலில் கலந்து குடித்தால் மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவை நீங்கும்.
துத்தி இலைகளை நெய்யில் வதக்கி, சாதத்துடன் கலந்து 40 முதல் 120 நாள்கள் சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நிற்கும்.
துத்தி இலையை நீரில் நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் வாய் கொப்பளித்து வந்தால், பற்களின் ஈறுகளில் கசியும் ரத்தம் நிற்கும்.
இந்தக் கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர தசைகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதனால்தான் இது 'அதிபலா' என்று அழைக்கப்படுகிறது.
மூலம்
உடலில் எதேனும் புண்கள் ஆறாமல் இருந்தால், இதன் இலையைப் பிழிந்து சாறு எடுத்து, மஞ்சளுடன் கலந்து பூசிவர புண்கள் விரைவில் குணமாகும்.
இதன் சாற்றைப் பச்சரிசி மாவுடன் கலந்து, கட்டிகள் உள்ள இடத்தில்வைத்துக் கட்டினால் கட்டிகள் உடையும்.
துத்திப்பூச் சாற்றுடன் கற்கண்டு கலந்து குடித்தால், ரத்த வாந்தி நிற்கும்.
துத்தி விதைச்சூரணத்துடன் கற்கண்டு மற்றும் தேன் கலந்து உட்கொண்டால் 'மேகநோய்' குணமாகும்.
இதன் இலைகளை கொதிக்கும் நீரில் வேகவைக்க வேண்டும். பின்னர் அந்த நீரைத் துணியில் பிழிந்து, உடல்வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் உடல்வலி குறையும்.
ரத்தக்கசிவு
இது ஆண்மையைப் பெருக்கும் தன்மைகொண்டது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த துத்தியை உணவாய் உட்கொள்வோம்! நம் உடல்நலத்தைக் காப்போம்!

Saturday, November 18, 2017

பச்சை மிளகாயை ஒதுக்காதீர்கள்! ஆய்வில் ஓர் தகவல்!

பச்சை மிளகாயை ஒதுக்காதீர்கள்! ஆய்வில் ஓர் தகவல்!

Image result for green chili images

நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் பச்சை மிளகாயில் பெருமளவு நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.

      பச்சை மிளகாய் காய்ந்து சிவந்து வத்தலாக மாறிவிட்டால் இந்த மருத்துவக் குணங்களும் காணாமல் போய்விடுகிறதாம். அதனால் பச்சை மிளகாயே உணவுக்கும் உடலுக்கும் நல்லது என்கின்றனர். பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மிக அதிக அளவில் இருப்பதால் நமது உடலுக்கு பாதுகாவலன் போன்று உதவுகிறது. இயங்கக் கூடிய உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றது. மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்தும் காப்பாற்றுகிறது. இளமையை நீடிக்கவைக்கும் வல்லமையும் இந்த பச்சை மிளகாய்க்கு உண்டு என்று கூறுகின்றனர் ஆராட்சியாளர்கள்.
               
இதில் விட்டமின்சிஅதிக அளவில் உள்ளதால் மிளகாயை பயன்படுத்தும் போது மூக்கடைப்பு குணமாவதை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்போம்.
அதே போன்று விட்டமின்  ‘யும் அதிக அளவில் இருக்கிறது. இது சருமத்தை பாதுகாக்கவும் எண்ணெய் சுரப்புக்கும் உதவுகிறது. இப்படி பச்சை மிளகாயால் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் எந்தவித கலோரிகளும் இல்லாமல் கிடைக்கிறது. அதனால் உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருப்பவர்களும் தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
               
ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக இருப்பதால் அவர்கள் பச்சை மிளகாயை உண்பதன் மூலம் அந்த பாதிப்பிலிருந்து விலகலாம் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
               
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உணவு செரிமானம் வேகமாக நடைபெறுகிறது. நாம் சாப்பிடும்போது நம் கையில் கிடைக்கும் பச்சை மிளகாய்த் துண்டுகளை கறிவேப்பிலை போல் ஒதுக்கி விடாமல் சாப்பிட்டாலே போதும். கறிவேப்பிலையும் அப்படித்தான். அதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அதை ஒதுக்காமல் உணவோடு சேர்த்து சாப்பிடுவது மிக மிக நல்லது.

நன்றி - சித்தன்குரல் மாத இதழ் 
                நவம்பர் - 2017

சந்தா விபரம் .. 9444403023


Tuesday, June 21, 2016

புதினா (Mentha spicata):





 இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

  1. புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.
 
  2. அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
 
  3. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
 
 4. புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.
 
 5. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.
 
 6. புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.
 
 7. புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.