Saturday, October 27, 2012

அம்பத்தூரில் இன்று இலவச சித்த மருத்துவ முகாம்

சென்னை அம்பத்தூரில் மர்ம காய்ச்சலைத் தீர்க்க உதவும் இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம் சனிக்கிழமை (அக்.27) நடைபெறுகிறது.

அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகிலேயே இந்த முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமுக்கு

தமிழ் மருத்துவக் கழகத்தின் அவிழ்தம் சித்த மருத்துவமனையும் மனித நேயம் அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. முகாமில் கலந்து கொள்வோருக்கு உடல்நலப் பிரச்னை உள்ள நிலையில் நிலவேம்புக் குடிநீர் கஷாயம், ஒரு வாரத்துக்கு உரிய நிலவேம்புக் குடிநீர் (தூள்) உள்ளிட்ட

சித்த மருந்துகள் இலவசமாக அளிக்கப்படும்.

Thursday, October 18, 2012


Opening of Impcops Franchise Clinics

INTIMATION
The Management of Impcops has decided to start Franchise Clinics to extend the business activities of IMPCOPS by proposing the following terms and conditions:
1. Franchisee should have at least 200 Sq. ft. spaces of which 100 Sq. Ft. for Consultation room
and 150 Sq. Ft. for sill~soutlet at Prime location in towns.
2. The Franchise clinic shall be started one kilo meter away from the existing Impcops Sales Depots or Stockist or Distributor business place. The minimum distance between two Franchise Clinics shall be 2.kilo meter.
3. Franchise arrangement is for a. period of five years, renewable based on mutually agreed terms or regulations approved by Impcops.
4. Franchisee must be a Graduate in ISM and must have registered either in the State or Central Register of CCIM.
5. Franchisee should be below the age of 40.
6. Franchisee should normally be a local resident.
7. Franchisee should not be in employment- full time or part time in any Govt. -National, State or Local Govt.- Municipality, a Manufacturing company.
8. Franchisee should be willing to,invest around Rs.1,50,000/-, of which, Rsl,OO,OOO/-towards initial supply ofmeqicines, and the remaining amount of Rs.50,000/- shall be the interest free refundable Security Deposit. In case of cancellation of Franchise, the Refundable Security Deposit shall be settled after 3 months from the date of expiry of Franchise period.
9. After becoming Franchisee of Impcops, medicines will be supplied against cheque or Demand Draft at the time of receipt of Indent. Medicines once sold will not be taken back.
10.Impcops Franchise Clinics shall have specified designs of layout of furniture, standard sign board etc., as given by Impcops Management and this expenditure shall be borne by Franchise.
11. Franchisee is free to give discounts from his profits to other doctors in the area who send prescription to the Franchise stores. Franchisee should not comment or criticize the prescriptions of other doctors, which come to the stores.
12.If more than one person is willing to take franchise in a given area, financial capabilities experience, aptitude and professional skills will be determined.
13. Franchisee will get a discount of 30% for all medicines except gold contained preparations and 15% for Gold contained medicines.
14. Franchise should store only IMPCOPS medicine and should not sell any other medicine or medicines without labels which contravenes Drug and Cosmetics act and its Rules.
15.Rental and other expenses should be borne by the franchise.
16.TIN Number, Rental agreement.and other government nomlS as applicable.
17. Franchisee can purchase medicines for their requirement from Head Office and from other nearest Impcops sales'depots.
For further details please contact IMPCOPS Head Office at Chennai
HeadOffice&Factory:
34-37,KalkiKrishnamurthy Salai,
Thiruvanmiyur,
Chennai -600041.
P.B.No.8602
Grams:"Dasamula"
Phone:044-24521029/24520189/24520244/24526995/24520787/24526933Fax: 044-24523313
TIN: 33950920002. CSTNO.45312
E-mail:impcops@dataone.in
Visit : www.impcops.org

Tuesday, February 28, 2012

"சித்த'ம் இறங்காதா...?


"சித்த'ம் இறங்காதா...?

First Published : 24 Feb 2012 01:55:53 AM IST


உலகம் தமிழர்களைத் தலைநிமிர்ந்து பார்ப்பதற்கான பல்வேறு அம்சங்களில் முக்கியமான ஒன்று சித்த மருத்துவமாகும். "நலம்' என்பது விரிவான விளக்கம் கொண்டதாகும். "மருத்துவம்' என்பது அதனுள் அடங்கியுள்ள ஒரு கூறாகும். ஆனால், இன்றைக்கு மருத்துவத்துறையோ நலத்துறையாகவே பார்க்கப்படுகிறது. இது சரியான கண்ணோட்டம் அன்று.
 நாட்டுக்கு அணிகலன் பூட்ட நினைத்த வள்ளுவப்பேராசான், முதலாவதாக அணிவிப்பது "பிணியின்மை'. வருமுன் காத்தல்தான் நாட்டுக்கு அழகு சேர்ப்பதில் முதன்மையாக நிற்கும் என்று கருதிச் சொல்லப்பட்டது அது. ஏனெனில், ஓர் அறிவார்ந்த சமூகம்தான் நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 உலக நலவாழ்வு நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) தொட்டு, அனைத்து நல அமைப்புகளும், அரசுகளும் நோய் வந்த பின் தீர்ப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, வருமுன் காத்தலுக்கு அளிப்பதில்லை என்பது வேதனையான ஒன்றாகும்.
 சித்த மருத்துவம் என்பது வெறும் மருத்துவத்துறை சார்ந்தது அன்று. அது ஒரு முழுமையான நலவாழ்வியல் ("ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர்') முறையாகும். ஆனால், வேதனை என்னவென்றால் இதன் அருமையும், பெருமையும் ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகள், கொள்கை வகுப்போர் என பலரும் முழுமையாக அறியாதிருப்பதுதான்.
 நாளொழுக்கம், காலவொழுக்கம், பிணியணுகாவிதி, உணவியல் நெறிமுறை, வைத்தியம், யோகம், ஞானம் என பல்வேறு கூறுகளை ஆழ அகலமாகக் கொண்டு, தட்பவெப்ப சூழலுக்கேற்ப, இயற்கையோடு இணைந்த நல்வாழ்வை மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க, சித்தர்கள் வழங்கிய அருட்கொடை சித்த மருத்துவம் என்பதை சமூக அறிஞர்களும், ஆர்வலர்களும்கூட உணராதிருப்பதுதான் நாட்டின் சரிவுக்குக் காரணமானவற்றில் முக்கியமானதாகும்.
 காமாலைக்கு மட்டுமல்லாமல், தேய்வு நோய் (எய்ட்ஸ்) தொடங்கி சிக்குன்குனியா, பன்றி காய்ச்சல் என மக்கள் பீதி அடைந்தபோது, அவர்களைக் காக்க நவீன மருத்துவ உலகம் தடுமாறியபோது, அச்சம் நீக்கி மக்கள் நலம் மேம்பட சித்த மருத்துவம் முன்னின்றது.
 ஆன்மிகமும், அறிவியலும் அருங்கலவையாக அமைந்திருக்கும் சித்த மருத்துவத்தைக் கற்பிக்கும் கல்வி நிலையங்களின் இன்றைய நிலை வேதனையானதாக அமைந்துள்ளது.
 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பழைமையான பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி இன்று முதலாமாண்டு மாணவர்களுக்குக் கதவடைத்து விட்டது. மத்திய அரசின் ஆய்வுக் குழு அறிக்கையின் அடிப்படையில், "ஆயுஷ்' துறை அனுமதியை மறுத்துள்ளது. மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யும் அதேவேளையில் சித்த மருத்துவக் கல்வியைக் காக்க வேண்டியது சமூக ஆர்வலர்களின் தார்மிகக் கடமையாகும்.
 பல லட்சம் மருத்துவர்கள் தேவைப்படும் இந்த நாட்டில், பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில் பாரம்பரிய மருத்துவம் சார்ந்த கல்லூரி மூடப்படுவது நியாயமாகுமா?
 கல்லூரி மூடப்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றை அவரவர் எல்லைக்குட்பட்டு, வாய்ப்பைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாது ஒருவர் மீது ஒருவரை காட்டி பழி போட்டுக்கொள்வது அழகன்று.
 படுக்கைகளில் நோயாளிகள் குறைவாக உள்ளனர் என்பது ஒரு காரணம். பரவலாக நாள்பட்ட நோய்களான பக்கவாதம், கீல்வாயு, முள்ளந்தண்டு வாதம், கரப்பான், காளாஞ்சகப்படை, மூலம் என்று பல நோய்க ளுக்கும் சித்த மருத்துவம் நோக்கி மக்கள் விழிப்படைந்து, வந்து கொண்டிருக்கும் சூழலில் படுக்கை நிரப்பப்படாததற்குக் காரணம், துறை சார்ந்த மருத்துவர்களே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
 அரசுப் பணி வாய்ப்பு கிடைத்து, மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் மருத்துவர்களும், அலுவலர்களும் உணர்ந்து தொண்டாற்றி இருந்தால் இந்தக் குறை ஏற்பட்டிருக்காது.
 அடுத்து, ஆசிரியப் பெருமக்கள் பற்றாக்குறை, பதவி உயர்வு, பணி மூப்பு, ஊதிய உயர்வு போன்றவை நவீன மருத்துவத் துறையைப் போன்று இந்திய மருத்துவத்துறையில் முறையாக இல்லை. முதுநிலை சித்த மருத்துவம் (எம்.டி) படித்தவர்கள் பல ஆயிரம் பேர் பணியின்றி உள்ளனர். இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எப்படி தெரியாமல் போயிற்று? அவர்களுக்கு ஏன் முறையான தேர்ந்தெடுப்பு முறை நடத்தி பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது புரியவில்லை.
 சித்த மருத்துவத்துறையில், உதவி மருத்துவ அலுவலராகப் பணியில் சேரும் ஒருவர் 30 ஆண்டுகள் கழித்து அதே பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார். இந்த அவலம் உலகில் வேறு எந்த மருத்துவத் துறையில் நடக்கும்?
 விரிவுரையாளராக இருப்பவர் பல காலம் அதே பதவியில் இருக்கிறார். இணை பேராசிரியராகவில்லை. இணை பேராசிரியரானவர், பேராசிரியர் ஆகவில்லை. ஏன் இரண்டு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளிலும் முறையாக முதல்வர் பதவி நிரப்பப்படாத அவலம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கோ, கீழ்ப்பாக்கத்துக்கோ, ஸ்டான்லிக்கோ ஏற்படுமா? அரசு அதிகாரிகளின் இந்த பாராமுகம் ஏன் என்றே விளங்கவில்லை?
 தகுதி உள்ளோரைக் கண்டறிந்து, பணி அமர்த்தி கல்வி நிலையங்களை நடத்தி பாரம்பரிய மருத்துவத்தைக் காக்க வேண்டியது அரசின் கடமையில்லையா? சீனா முதலான நாடுகளைப் பார்த்தாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா? 1997-ம் ஆண்டு தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை; அதாவது, அந்தச் சட்டத்தின் வழி அமைக்கப்பட்ட சித்த மருத்துவ மன்றம் செயலற்றுக் கிடக்கிறது. உறுப்பினர் தேர்தல்கூட நடைபெறவில்லை. இதில் அரசின் மெத்தனம் பலகாலமாக விளங்கவே இல்லை.
 வளரும் துறை, வளர்க்கப்பட வேண்டிய மருத்துவத் துறை எனக் கருதி மத்திய அரசின் "ஆயுஷ்' துறையாவது சற்று விதி தளர்த்தி அனுமதி வழங்கி வழிநடத்தக் கூடாதா? கடந்த ஆண்டுகளில் அரசுக்கே திருப்பி அளித்த நிதியை, நலிவடைந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கியாவது காக்க முன்வரக் கூடாதா? மனம் இருந்தால்தானே மார்க்கம் பிறக்க...
 வருங்கால மக்களின் நலன் கருதி செயின்ட் ஜார்ஜ் கோட்டையும், தில்லி பட்டணமும் தமிழ் மருத்துவத்தின்பால் தன் பார்வையை வைக்குமா என்பதே உண்மையான சமூக ஆர்வலர்களின் ஏக்கமாக உள்ளது.
 அகத்தியரும், திருமூலரும் விதைத்த இந்த பாரம்பரிய மருத்துவப் பயிரை காக்க அரசும், அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோள்.

 (கட்டுரையாளர்: தலைவர் -  தமிழ் மருத்துவக் கழகம், சென்னை).
 

Wednesday, February 8, 2012

சிக்கல் சித்த, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள்


சிக்கல் சித்த, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள்

First Published : 08 Feb 2012 02:17:58 PM IST


திருநெல்வேலி, பிப். 7: நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியும் இப்போது மாணவர்களின் போராட்ட களமாகியிருக்கிறது.
 இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதால் சிக்கல் நீடிக்கிறது.
 தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் இக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்குச் செல்வதற்கு மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுவதுபோல் ஆயுர்வேத, சித்த மருத்துவத்தை கற்றுத் தேர்வதற்கும் ஆர்வம் காணப்படுகிறது.
 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இக் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவியர் கவுன்சலிங் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 ஆயுர்வேத கல்லூரி: கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. முதலாண்டுக்கு 45 மாணவ, மாணவியரும், 2-ம் ஆண்டுக்கு 48 மாணவ, மாணவியரும் சேர்க்கப்பட்டனர். 3-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 21.10.2011-ம் தேதி சென்னையில் கவுன்சலிங் நடத்தப்பட்டு 48 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
 ஆனால், அவர்களுக்கான வகுப்புகள் கடந்த 6 மாதமாகியும் தொடங்கப்படவில்லை. இக்கல்லூரிக்கான 3-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய ஆயுஷ் துறை தெரிவித்துள்ளது மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இக் கல்லூரியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
 இதுபோல் பாளையங்கோட்டையில் 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கு இளநிலையில் 100, முதுநிலையில் 68 மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
 இக் கல்லூரிகளில் உரிய கட்டமைப்பு வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றும், போதிய ஆசிரியர்கள், பணியாளர்களை நியமிக்கவும், மூலிகைப் பண்ணைகளை அமைக்கவும் இங்கு ஆய்வு மேற்கொண்ட மத்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் அவ்வப்போது அறிவுறுத்தியும் கடந்த சில ஆண்டுகளாக அதன்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இப்போது மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 மக்கள் பிரதிநிதிகள் அக் கல்லூரிக்குச் சென்று ஆய்வு நடத்துகிறார்கள். ஆனாலும் அடிப்படை வசதிகள்கூட அங்கு செய்யப்படவில்லை.
 போதிய மருந்துகள் தயாரித்து வழங்காததால் இக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருவதில்லை. இக் கல்லூரிக்கான மூலிகைப் பண்ணை அமைக்க தேரேகால்புதூர் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டும் அங்கு மூலிகைகளை வளர்க்கவில்லை.
 ஏற்கெனவே பல ஆண்டுகளாக இங்கு செயல்பட்ட கோட்டாறு அரசு மருத்துவமனைக் கட்டடத்தை ஆயுர்வேத கல்லூரியாக மாற்றியுள்ளனர். இதனால் போதுமான வசதிகள் இல்லை. இங்குள்ள உள்நோயாளிகள் பிரிவில் பெரும்பாலான படுக்கைகளும் காலியாக வெறிச்சோடியிருக்கின்றன.
 பாளையங்கோட்டையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் தாற்காலிக கட்டடத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.
 தற்போதும் அதே பழைய கட்டடத்தில் கல்லூரி செயல்படுகிறது. மூலிகைகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ள புதிய இடத்தில் இந்தக் கல்லூரிக்கான கட்டடத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
 ஆனால் அக்கோரிக்கை கிணற்றில் இட்ட கல்லாகவே இருக்கிறது.
 மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருந்த அரிய மூலிகைகள் பலவும் தற்போது காணாமல் போய்விட்டன.
 பாரம்பரியமிக்க இந்தக் கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு தொடக்கத்தில் அதிகளவில் நோயாளிகள் வந்து மருந்துகளை பெற்றுச் செல்வார்கள். சரியான விகிதத்தில் மூலிகைகளைக் கலந்து உருவாக்கப்படும் மருந்துகளை பற்றாக்குறை இல்லாமல் மருத்துவர்கள் அவர்களுக்கு அளித்ததால் நோய்களும் குணமாயின.
 இப்போது நிலைமை அப்படியில்லை. மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. போதுமான பணியாளர்கள் இல்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இக் கல்லூரியில் போதிய அளவுக்கு ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
 இதுபோன்று பல்வேறு குறைபாடுகளுடன் கல்லூரியும், மருத்துவமனையும் செயல்படுவதை மத் திய ஆயுஷ் துறை பலமுறை சுட்டிக்காட்டியும் அவை சரிசெய்யப்படவில்லை. இதனால் இப்போது மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் கெஞ்சி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியிலும், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியிலும் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியும், போதிய ஆசிரியர்களை நியமித்தும், கட்டமைப்புகளையும், மூலிகைப் பண்ணைகளை  அமைத்தும் மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுப்பதே பிரச்னைக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து. 

Tuesday, January 31, 2012

DEC-1 World AIDS Day


Backed by the United Nations, the "Getting to Zero" campaign runs until 2015 and builds on last year’s successful World AIDS Day "Light for Rights" initiative encompassing a range of vital issues identified by key affected populations.The decision to go with the millennium development related goal of "Getting to Zero" comes after extensive discussions among people living with HIV, health activists, broader civil society and many others – more than a hundred organizations in all.The vision for this year’s World AIDS Day and beyond may be aspirational, but the journey towards its attainment is laid with concrete milestones.                   

  10 goals for 2015

· Sexual transmission of HIV reduced by half, including among young people, men who have sex with men and transmission in the context of sex work;

· Vertical transmission of HIV eliminated and AIDS-related maternal deaths reduced by half;

· All new HIV infections prevented among people who use drugs;

· Universal access to antiretroviral therapy for people living with HIV who are eligible for treatment;

· TB deaths among people living with HIV reduced by half;

· All people living with HIV and households affected by HIV are addressed in all national social protection strategies and have access to essential care and support;

· Countries with punitive laws and practices around HIV transmission, sex work, drug use or homosexuality that block effective responses reduced by half;

· HIV-related restrictions on entry, stay and residence eliminated in half of the countries that have such restrictions;

· HIV-specific needs of women and girls are addressed in at least half of all national HIV responses;

· Zero tolerance for gender-based violence..

In Siddha system RAN Therayhy is found to be very effective in the treatment of HIV infected persons by increasing the Immune status. It was proved by comparing the RTPCR levels of the diseased persons. The incidence of Opportunistic Infections  were  reduced for those undergoing Siddha Treatment.

TMK –2011 GLANCE


AWARENESS PROGRAMS:

PARYAVARAN MITHRA , is a project by Govt of India motivates to form herbal garden in school premises, association with Murugaian Memorial Municipal Girls High school of  Thirvanamalai.

WORKSHOP ON SIDDHA FORMULATIONS  organized by students of M.Sc. Plant Biology and plant Bio-Technology of S.D.N.B. Vaishnav College for Women , Chrompet on March 12.

NOI ILLA NERI’’ in the HUMOUR CLUB INTERNATIONAL , Mylapore on 27th march 2011.

ANNUAL DAY Celebration of Thiruvalluvar Mazhaliyar Elementary school on 2nd April 2011

FREE SIDDHA MEDICAL CAMP on 3rd October 2011 at NSS CAMP - Panai olaipadi, Thiruvanamalai.

NOI ILLA NERI’’ in the Kalai Araperavai, Kaattan kollathur on 1st October 2011.


INTRODUCTION TO SIDDHA MEDICINE  in a training program for school teachers organized by “Karuna Club”on November.

IMPORTANCE OF TRADITIONAL FOOD for members of PTA, in association with Annai Saradha Devi Magalir Mandram, on December.

ACADEMIC ACTIVITIES:

POONEERU collection at  a village called Sitthamalli near Uthirmeerur of Kancheepuram District.

One day visit to the ORGANIC AGRICULTURAL RESEARCH FARM, at Sukkankollai near Vedanthangal was made, where we were able to see more then 80 varieties of Paddy of our traditional tamilians.

Training on herbal identification along with their therapeutical values at IRULAR’S TRIBAL FARM located at Thandarai Village near Chengalpattu and gained practical experience in their way of treatment to snake bites.

CO-ORDINATED ACTIVITIES:

WORLD SIDDHA DAY Meeting organized by ISGMA at Tirunelveli, Chennai.

SIDDHA PG COURSE FORMATION  organized by CCIM at DELHI on October 2011.

VIZHUDHU A Training progam for young siddha doctors, organized by ISGMA at Salem on December 2011.

HEALTHY LIVING WITH SIDDHA ASPECT a special lecture for members of ISHA Yoga in a program “Arogya Pariksha” at Salem on December 2011.

AWARENESS PROGRAMS THROUGH MEDIA:

MARUTHUVA NERAM -Dr.D.Velayudham , TMK  participated in MAKKAL TV –LIVE SHOW about Saganavatham, Anaemia, Madhumegam, Kuruthi azhal noi, Thandu vada Noigal, Diseases of Summer seasons and Rainy seasons.

PARAMPARIYA SAMAYAL for promoting Traditional Foods. The show is being  telecasted every Monday between 1.00 -1.30 pm. Members of TMK Dr.A.Kirubagaran, Dr.S.Senthil karunakaran and Dr.P.Hemalatha demonstrated the herbal food preparation and explained their medicinal importance .

PUBLICATIONS:

Tamizh maruthuva kazhagam steps into the field of internet to publish its activity to the world in the form of www.tmk-chennai. blogspot.com

Health tips for Exam going Students by Dr.D.Velayudam was published on March 2011 in CHUTTI VIKADAN Magazine.

Cooking and healthy food tips for people by Dr.A.Kirubagaran was published on Augest 2011 in SINEGATHI monthly Magazine

Health tips for people by Dr.D.Velayudam was published on September 2011 in CHUTTI VIKADAN, AVAL VIGADAN monthly Magazine.

MAKKAL MARUTHUVAM:

Monthly News letter from January 2011.

SPECIAL ISSUES

1.The International Year of Forests 2011(May),

2. National Nutrition week (September)

3. Diabetes (November)