Tuesday, July 30, 2013

உடல் பருமன் குறைய


  • அன்னாசி பழத்தில் விட்டமின் B அதிக அளவில் உள்ளது. நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்குவது மட்டுமல்லாமல் உடல் எடையும் குறையும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்தால் முக அழகு பொலிவு பெருகும்.
  • இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.
  • ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டு வ‌ந்தால்‌ உட‌ல் எடை குறையும். தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்தால் உடலில் எடை குறையும். பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான‌கொழுப்பு குறையும். காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

அருகம்புல்


  • அருகம்புல் சாதாரணமாக இந்தியாவில் எல்லா இடங்களிலும் தாராலமாக கிடைக்கும், அவற்றினால் பல பயன்கள் உண்டு.
  • நரம்பு தளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் நீங்கும். மலச்சிக்கல், தூக்கமின்மை குணமாகும். வயிற்றின் அமிலத் தன்மை குறையும். உடலில் தேங்கியுள்ள கழிவுகள், விஷத்தன்மை வெளியேறும். நீரிழிவு, தொழுநோய், கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும். பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை குணமாகும். உடலுக்கு அழகும், வசீகரமும் தரும்.
  • தினமும் டீ, காபிக்கு பதிலாக அருகம்புல் சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து சாப்பிடுங்கள். அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி, இடித்து, கஷாயம் செய்து கொள்ளவும். இத்துடன், பால், சர்க்கரை சேர்த்து, காபி போல சாப்பிட, மார்பு வலி நீங்கும், உடல் இளைக்க உதவும், உறக்கம் தரும். பல் மற்றும் ஈறு நோய்கள் நீங்கும், வயிற்று புண், கர்ப்பப்பை கோளாறுகள் போன்றவை குணமாகும்.
  • அருகம்புல்லையும், ஆல இலையையும் சமமாக எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். தூதுவளை வேரையும் அருகம்புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும் வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுகள் மட்டுமே பிழிந்து விட்டால் வலி உடனே நீங்கும்.


முருங்கை

பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும். எளிதில் உடையும் தன்மை கொண்டது. இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று கூறுவார்கள். இது இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டவை. முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டது. 

முருங்கை இலையால் மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிநோய், மூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.முருங்கைக் கீரையை சமைத்து உண்டுவந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். இதில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும் மற்றும் வயிற்றுப்புண் ஆறும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும்.இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும்.இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். 

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும். 

நாக்கில் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்தத்தின் செயல்பாடு சீராக இருக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும். அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். இல்லற உறவில் நாட்டம் கொள்ளச் செய்யும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும். 

முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப்படுத்தி இரத்தத்தை அதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும். வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும், முடி நீண்டுவளரும், நரை முடி அகலும், தோல் வியாதிகள் நீங்கும். மொத்தத்தில் முருங்கை காய் முழுமையான சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது.ஆதலால் இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் (SPERM) பெருகும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். முடி நீண்டுவளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் நல்ல மருந்து. 

முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. 

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிபதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

சுண்டைக்காய்

சுண்டைக்காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய் கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி, சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

Sesbania grandiflora

  • Sesbania grandiflora (also known as agati) or hummingbird tree/scarlet wisteria is a small tree in the genus Sesbania.
  • Generally the green leaves of this variety is used for cooking similar to spinach but the flower, leaf and the bark of Sesbania  Grandiflora tree has got a number of medicinal properties which is used in Siddha and other traditional medicines.
  • The simplest manner in which these leaves are used is by boiling the leaves with water to make a tea, which bears antibiotic, anthelmintic and anti tumoural properties.
  • For all sorts of sprains and bruises, sesbania grandiflora’s crushed leaves can be applied and the juice in this juice acts as a good medical treatment.
  • For women’s health issues such as white discharge or vaginal discharge accompanied with odour, these leaves are proven to be a great cure option. Sesbania grandiflora’s leaves can be added to milk and then the milk can be boiled. After this yoghurt has to be prepared out of this boiled milk (with the added leaves in it). The yoghurt after preparation has to be thinned by beating it.
  • The resulting thinned buttermilk has to be taken twice a day by women who suffer from the above stated problems. They can certainly experience a significant relief very soon.
  • The bark of this tree is boiled with water and the content is filtered to get a decoction, which can be consumed for treating diabetes and fever. This liquid is also used as a medicine to treat diarrhea, dysentery and gastric troubles.
  • Sesbania Grandiflora‘s flowers have a special ability to improve vision. The juice of the flower is squeezed into eyes to eliminate dullness in vision. The leaves also have medical benefits to treat night blindness.
  • Similarly, the roots are used as medical component in curing malaria.
  • Juice or extract made out of the roots are applied for rheumatism, itching and swelling problems. When this is consumed internally, system disorders are cured.
  • For phlegm or cough the root resin mixed with honey and one teaspoonful of this mixture is taken.
  • For digestive system and respiratory system this plant is a very effective medicine that keeps the required proportions balanced in the body.
  • All parts of this unique plant are useful. This fact has been acknowledged in thorough studies. It is also used as an antidote for poisons.
  • The flowers are so very useful in curing sinusitis and nose blocks and that is why they are used in almost all Siddha medicines for cold and fever.
  • The plant has various uses in folk and traditional medicines for headache, swellings, anemia, bronchitis, pains and tumors.                 
  •                                                                                     Dr.Senthil Karunakaran, M.D(Siddha)
  •                                                                                     Ambattur, Chennai